Monday, October 31, 2011

காத்திருத்தல்


நேற்றுவரை அம்மாவின் சோறு இனித்தது
இப்போது அதுவும் புளிக்கிறது
காலையில் சாப்பிட்ட காப்பி மட்டும்தான் கனக்கிறது இன்னும்..
நீ விட்டுப்போன நினைவுகளோடு
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று….

கவிதை வரி


உச்சந்தலையில் சிலிர் என்ற சிலிர்ப்பொடு
இரங்கும் முதல் துளி மழை போல்
என்றோ நீ வாசிதத அந்த கவிதை வரிகள்
தமிழ்தாய் வாழ்த்தாய் காதுகளில் ஒலிக்க
அன்றைய பொழுதை துவக்குவேன்

AMMA


அன்புக்கு
இலக்கணமும்
நீ தான்
தமிழ் பண்புக்கு
புத்தகமும்
நீ தான்
கற்புக்கு
கண்ணகியும்
நீ தான்
பொறுமைக்கு
பூமியும்
நீ தான்
கண்டிப்பதில்
கிட்லரும்
நீ தான்
அன்புக்கு அன்னை
திரேசாவும்
நீ தான்
படி என்று
சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்
வீட்டில் இராட்சியத்துக்கு
அரசியும்
நீ தான்
அன்போடு
பேசும் தோழியும்
நீ தான்
பூமியில் வாழும்
உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்

உன் கண்ணீர்


ஒரு துழியாய் எட்டிப்பார்த்தாய்
வெளிவராது கதவடைத்தேன்
ஆனால் எனக்கு தெரியும்,
எப்போதாவது ஒரு நாள்
நீ வெள்ளமாய் உருவெடுப்பாய்
அன்று என் கதவுகளுக்கு பலம் வராது
உன்னை தடுப்பதற்கு
வந்தது நேரம்,
என் இமைக்கதவுகள்
பலமிழந்து விட்டது
உன் கண்ணீர் அருவியின் முன்

திறமை & தன்னம்பிக்கை

முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை
முடியாததை செய்ய முயற்சி செய்தால் அது தன்னம்பிக்கை...

Monday, October 24, 2011

உலகை விட பெரியது


உலகம் என்பது மிக பெரியது
அதில் வாழும் உயிர்கள் மிக சிறியது
அதுபோல
நமது உடலும் உயிரும் சிறியது
ஆனால் நமது நட்பு
உலகை விட பெரியது...

Thursday, October 20, 2011

உண்மை அன்பு


நமக்கு மிகவும் பிடித்தவர்கள்
நம்முடன் இருக்க வேண்டும்
என்று ஆசைபடுவதை விட
நலமுடன் இருக்க வேண்டும் என்று
ஆசைபடுவதே உண்மையான அன்பு...

Wednesday, October 19, 2011

சிறந்த காதல்

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க
கற்றுகொள்...
இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்...

Saturday, October 15, 2011

உங்கள் நட்பு

காயம் இல்லாமல்
காதல் இல்லை
ராகம் இல்லாமல்
பாடல் இல்லை
உயிர் இல்லாமல்
உடல் இல்லை
பாசம் இல்லாமல்
மனிதன் இல்லை
உங்கள் நட்பு இல்லாமல்
நான் என்றும் இல்லை...

Friday, October 14, 2011

போராடி

தோல்வியோடு போராடி
ஜெயிக்கும் வெற்றியில்
தான் பலம் இருக்கும்
முயற்சியோடு போராடி
ஜெயிக்கும் மனதில் தான் சாதனை இருக்கும்...

Tuesday, October 11, 2011

எனக்குள்

எனக்குள் ஒரு வசந்தம் உன் வரவு
எனக்குள் ஒரு மற்றம் உன் நினைவு
எனக்குள் ஒரு இன்பம் உன் உறவு
எனக்குள் ஒரு துன்பம் உன் பிரிவு...

உன்னை நேசிக்கும் இதயத்தில்

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள்
வாழ்வதை விட

உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள்
வாழ்ந்து பார்

ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரை சொல்லும்...

Sunday, October 9, 2011

நிறைய விஷயங்களும்

கடற்கரை அலைகள்
காலைத்தொட்டு
வணங்குகிறது
என்பதற்காக
அதனை நம்பி
கடலுக்குள்ளே இறங்குவது
புத்திசாலித்தனமில்லை

வாழ்க்கையில்
நிறைய விஷயங்களும்
அப்படித்தான்...

Saturday, October 8, 2011

அன்பு காட்டி

அன்பு காட்டி தோதவர்கள் இல்லை
கோபம் காட்டி ஜெயித்தவர்கள் இல்லை...

ஒரு தலை காதல்:

நெடு தொலைவில் இருந்து ஒரு வெளிச்சம் என் மேல்
கண்டேனடி நான்  உன்னை அந்த ஒரு நொடி போதுதில்

என்னையே மறந்தேன் என் இதயத்தை உன்னிடம் தொலைத்தேன்
நிலவை சுற்றி வரும் நட்சத்திரங்கள் போல உன்னையே

சுற்றி சுற்றி வந்தேன் உனக்கு தெரியாமலே
மனசுக்குள் மத்தாப்பு உன்னுடைய பொன் சிரிப்பு

இதயத்துக்குள் ஏதோ ஒரு போராட்டம் உன்னை நினைத்து
பல எதிர்பார்புகளோட என் காதலை உன்னிடம் சொல்ல துணிந்தேன்

மனதை திடமாக்கினேன் கனவுகளில் நீந்தினேன் 
நீ சொல்லும் பதிலுக்காக நொடிகளை கடந்தேன்

விடிந்தது என் இதய துடிப்பு அதிகமானது
அளவுக்கு அதிகம் வியர்ந்தது மெல்ல மெல்ல உன்

அருகே வந்து கண்ணாடி முன் கொட்டிய வார்த்தைகளை
கண் மூடி கொண்டு உன்னிடம் ஒப்பித்தேன் உன் பதிலை எதிர் பார்த்து

அதற்கு அவள் சொன்ன பதில்
டே பொறுக்கி நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல
செருப்பு பிஞ்சிரும் ராஸ்கல்

இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்
காதல சொன்ன பாட்ட காட்டுவளுங்க காதலிச்ச பிறகு டாட்டா காட்டுவளுங்க...

ஒரு போதும் அழிவதில்லை


காற்றுக்கூட நுழைய முனைந்து
தோற்றுப்போகும் நெருக்கம்
நம் நட்பில் கண்டோம்.....
நேற்றைய பொழுதின் நினைவுகள்
ஒற்றையாய் என் மனப்பூங்காவில்....

கடந்தகாலத்தை எண்ணிப் புன்னகைக்கவா...?
இழந்து போன எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் விடவா...?
ஒன்று நிச்சயம் உனதான நினைவுகள் ஒரு போதும் அழிவதில்லை

நீ அறிந்து கொள்வாய்

உனக்கு பிடிக்கும் பலரிடம் பழகுவதை விட
உன்னை பிடிக்கும் ஒருவரிடம் பழகிபார்
உன்னையே நீ அறிந்து கொள்வாய்...

வலி

கண்ணீரை சிந்தும் கண்களை விட அதை மறைத்து
புன்னகை செய்யும் இதழுக்கே வலி அதிகம்...

Friday, October 7, 2011

நீ கூறிய வார்த்தையால்

படர்ந்து கிடக்கும்
பச்சை வயல் வெளியில்
பணித்து நிற்கும் ஒற்றை கொக்காய் நான்

நிரம்பி வழியும் நீரளியில்
நிரந்தரமற்ற நுரையை நான்

சிறகடிக்கும் சிட்டுகுறிவியின்
சிதறிபோகும் சிறகாய் நான்

மலர்களின் மடியில்
மறைந்திடும் பனித்துளியாய் நான்

இத்தணையும் அன்று நீ கூறிய வார்த்தையால்
நான் எடுத்த ஜென்மங்கள் மறைந்துவிடு மனமே...

தலைக்கனம் வந்ததில்லை


எழுது கோல்கள் மாறினாலும்
என் எழுத்துகள் மாறுவதில்லை
விரல்களில் காயம் என்றாலும்
என் எழுத்துகளுக்கோ ஓய்வில்லை
எழுத்துகளில் பிழை வந்தாலும்
பொருளில் பிழை என்றுமில்லை
காலம் மாறினாலும் நான்
கவி எழுத தவறியதில்லை
எடுத்துச்சொல்லும் எனக்கோ
என்றும் தலைக்கனம் வந்ததில்லை

Thursday, October 6, 2011

கிணற்று நீறை

கிணற்று நீறை போல் ஒருபோதும் சிறைபட்டு கிடக்காதே
ஆற்று நீறை போல் ஓடிகொண்டே இரு
தோல்வி உன்னைவிட்டு தொலைவில் செல்லும்...

கிணற்று நீறை

கிணற்று நீறை போல் ஒருபோதும் சிறைபட்டு கிடக்காதே
ஆற்று நீறை போல் ஓடிகொண்டே இரு
தோல்வி உன்னைவிட்டு தொலைவில் செல்லும்...

வெறுக்காமல் இருக்க

நினைத்து கொண்டே இரு
உன்னை யாரும் மறக்காமல் இருக்க
சிரித்து கொண்டே இரு
உன்னை யாரும் வெறுக்காமல் இருக்க...

ஊசடுபவளே

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊசடுபவளே
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை
நின்று விடும் என் ஓட்டம்...                                                   

தேவை இல்லாதது

இன்று "நீ" வருத்தப்பட்டு கொண்டிருக்கும்
ஒரு விஷயத்தை நாளை நினைத்துப்பார்
அது தேவை இல்லாதது என்று
உனக்கே புரியும் ...

Wednesday, October 5, 2011

உன் உண்மை காதலில்

காதலை தேடி நீ ஓடாதே, தோற்று விடுவாய் வாழ்கையில்
வாழ்க்கையை தேடி நீ ஓடு, வென்றுவிடுவாய் உன் உண்மை காதலில்...

Tuesday, October 4, 2011

நாம் விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும்
ஆனால்
உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர் பார்க்கும்...


என் உயிராக

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
ஜனனம் ஒன்று இருந்தால் அதில்
நியே வேண்டும் உறவாக இல்லை
உயிராக...

யார் நீ

நீ யாரென்று
தெரியாமல் தொடங்கிய
கதையில்
நான் யாரென்றே தெரியாமல்
போய்விட்டது...

உன் நினைவுகளை

என் அருகே நீ இருந்தாலும் இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு
வைத்திருப்பேன் உன் நினைவுகளை...

Monday, October 3, 2011

உன் நினைவு என்றும் என் மனதில் தான்

நிலவு விண்ணில் இருந்தாலும் அதன் வெளிச்சம் என்றும்
பூமியல் தான் இருக்கும் அது போல
நீ எங்கு இருந்தாலும் உன் நினைவு என்றும் என் மனதில் தான்...