Friday, September 30, 2011

இதயத்தின் வலி

என்னை விரும்பிய பல உயிர்களை
நான் வெறுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உயிர்
என்னை வெறுக்கும் போது
தான் உணர்கிறேன் இதயத்தின் வலியை....


என் ஆயுளுக்கும் போதும்

மறைக்கவோ மறக்கவோ
இயலாத ஒன்று
உன்னுடன் குறைவாக பேசிய
எனக்கே எனக்கான தருணங்கள்
எதிர்பாராத சமயத்தில் கிடைத்த
உன் பாராட்டுக்கள்
எதிர்பார்த்து ஏமாந்த
சில நிமிடங்கள்
புரிந்தும் புரியாதது போல் சில உணர்வுகள்
கவிதைகளால் பேசிய சில வரிகள்
நான் மட்டுமே அனுபவித்த
உன்னோடு கழித்த அந்த நொடிகள் 
எனக்கு மட்டுமே கிடைத்த நீ
இனி என்ன வேண்டும்
எனக்கு இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
போதும், என் ஆயுளுக்கும்...

Thursday, September 29, 2011

உண்மையான அன்பு

விரும்பும் போது விரும்புகிறேன் என்பதை விட வெறுத்த போதும் விரும்புகிறேன் என்பதே உண்மையான அன்பு...

வெற்றியின் முதல்படி

நமக்கு அமைவது தான் வாழ்க்கை என்று எண்ணாமல்
நாம் அமைத்து கொள்வது தான் வாழ்க்கை என்று
முடிவெடுங்கள் அது தான் உங்கள் வெற்றியின் முதல்படி...

உன்னை போல

என்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
என்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
................உன்னை போல.................

Wednesday, September 28, 2011

உயிராக

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகிறது
என்றால் நீ யாரையே நேசிக்கிறாய்
என்று அர்த்தம் உண்மையாக அல்ல உயிராக...

நீ இல்லாத நொடிகள்

அன்பின் ஆழம் எவ்வளவு
என்பது பிரிவின் போது தான் தெரியும்
அதை உணர்கிறேன்
நீ இல்லாத ஒவ்வெரு நொடிகளிலும்...

உன் மௌனம்

ஒரு துளி ரத்தம்
கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவரின்
"மௌனம்"...

Tuesday, September 27, 2011

உனக்காக நான் இருப்பேன்

உன் உயிரில்
உன் மனதில்
உன் கணவில்
உன் நினைவில்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரும் இல்லாத போது உனக்காக நான் இருப்பேன்...

Monday, September 26, 2011

நேசித்தவர்கள்

நேசித்தவர்கள்
எல்லாம் நம்மோடு
நிலைத்துவிட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வழியும்
நம்மால் உணரமுடியமலே
போய்விடும்...

மறந்துவிடு

நன்மை செய்தால்..
துரோகத்தை மறந்துவிடு..!
நண்பன் செய்தால்
குற்றத்தை மறந்துவிடு…!
காலம் தந்தால்…
சோகத்தை மறந்துவிடு..!
காதல் தந்தால்…
காயத்தை மறந்துவிடு..!
இன்பம் தந்தால்…
இன்னல்கள் மறந்துவிடு…!
பிரியம் தந்தால்…
பிரிவை மறந்துவிடு..

Sunday, September 25, 2011

அன்பின் அருமை

உயிரின் அருமை உடலை விட்டு பிரியும் போது தெரியும்
அன்பின் அருமை நாம் நேசிக்கும் ஒருவர் அருகில் இல்லாத போது தெரியும்...

Saturday, September 24, 2011

மௌனம்

ஒரு மனிதனை தாக்கும்
மிக பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒருவரின் மௌனம்...


Friday, September 23, 2011

உழைப்பின் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு கலையின் பின்னும்
ஒரு உழைப்பு மறைந்து கிடக்கிறது
ஒவ்வொரு உழைப்பின் பின்னும்
பாராட்டு என்னும் எதிர்பார்ப்பு மறைந்து கிடக்கிறது

என்றும் வளர்பிறையை நீ

வெண்ணிலா
வானத்தில் இருக்கும் பொழுது
என் மனதில் நீ

கவலைபடாதே
அம்மாவாசை அன்று மறைந்து விடமாட்டாய்
ஏனெனில்

என்றும் என் மனதில் நீ "வளர்பிறையை"

Thursday, September 22, 2011

வெற்றி

வெற்றியை நோக்கி செல்லும் போது திரும்பி பார்காதே
ஆனால்
வெற்றியை அடைந்த பிறகு திரும்பி பார்க்க மறந்து விடாதே...

என் அருகே நீ

நிலவை பார்க்கும் போது நீ என்னை விட்டு தூரத்தில் இருபதாக உணருகிறேன்
என் நிழலை பார்க்கும் போது தான் தெரிகிறது  நீ என்னோடு இருக்கிறாய் என்று...

Wednesday, September 21, 2011

உண்மையாய் இருப்பவர்களை

பழகி பாசம் காட்டுவது போல் பகல் வேஷம் போடுபவரை வரவேற்கும் இவ் உலகம் .. உருத்தெரியாமல் உடைத்து விடுகிறது.. உண்மையாய் இருப்பவர்களை...

என்னை விட்டு பிரியாது

காற்றோடு கலந்து விட்ட
போக்களின் வாசமும்
என்னோடு கலந்து விட்ட
அவளின் நேசமும் என்றும் பிரியாது...

தொலைகதே

பார்த்தவுடன் பழகாதே .....!
பழகியவுடன் இணையாதே.....!
இணைந்தவுடன் பிரியாதே.....!
பிரிந்தவுடன் வருந்தாதே .....!
வருந்தியவுடன் தேடாதே .....!
தேடி கிடைத்தால்.....!
மீண்டும் தொலைக்காதே....!

Tuesday, September 20, 2011

கண்ணீர் சிந்தாதே

நீ யாருக்காவும் கண்ணீர் சிந்தாதே
உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள்
உன்னை அழ விடமாட்டார்கள்...

என் கவிதைகள்

உன் முன்னால்
தொலைந்து போன
என் வார்த்தைகளை
தேடிப்பிடித்து
கவிதைகளாக்குகிறேன்
உனக்காகவே !
கண்டெடுக்க உதவிய
உனக்கு
சமர்பிக்கவே !

Monday, September 19, 2011

கண்

கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு
கண்ணுக்கு உலகம் தெரியும்
கண்ணீருக்கு உள்ளம் தெரியும்...

மரமாக நான் இருப்பேன்

நீ வாடிய மலராக இருந்தால் நீ உதிரும் நேரத்தில் உன்னை தாங்கி பிடிக்கும் மரமாக நான் இருப்பேன்...

என் மேல் உன் பார்வை பட்டதால்

தென்றலும் என்னை தொடவில்லை
குளிர் மழையும் என்மேல் விழவில்லை
இருந்தாலும் சிலிர்த்தேன்
என் மேல் உன் பார்வை பட்டதால்...

Sunday, September 18, 2011

புரியாத அன்பு

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்
ஆனால் சிலர் அன்பு புரியாது
அதை காலம் உணர்த்தும் போது கண்கள் கலங்கும்...

உன் அன்பு

அன்பு தண்ணீர் போல
தண்ணீர் தாகத்தை போக்கும்
உன் அன்பு சோகத்தை போக்கும்!!!

தனிமை பயணம்

இருக்கைகள் நிரம்பியது
இடைவெளியும் நிரம்பியது
நான் மட்டும் நிற்கிறேன்
நடை பிணமாக
நெரிசல் பேருந்தில்
ஓர் தனிமை பயணம்
அவள் வராத நாட்களில்...

Saturday, September 17, 2011

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை....

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை....

தொடர்கதையாய்

நீ படித்த
என் கவிதைகளோ
சிறுகதையாக
என்னுள் புதையுண்டுப்போன
படிக்காத கவிதைகளோ
தொடர்கதையாக‌...

சந்திப்பு

 பிரிந்த பின்பு சந்திக்கும் போது
பிரிவு ஒரு தவம்...
சந்தித்து விட்டு பிரிபவர்களுக்கு
சந்திப்பு ஒரு வரம்

Friday, September 16, 2011

KADAVULUKKUM IDAM KODUNGAL


கடவுளுக்கு கல்லூரியில் இடம் கொடுங்கள்,

அபோதுதான் உணருவான் நட்பின் அருமையை …..

இனி படைக்க மாட்டான் பிரிவு எனும்
கொடுமையை !!!!!!

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
கடமை
அதை நீ நிறைவேற்று!
வாழ்க்கை ஒரு
சோதனை
அதை நீ சமாளி!

வாழ்க்கை ஒரு
சோகம்
அதை நீ எதிர்த்து நீல்!
வாழ்க்கை ஒரு
புதிர்
அதை நீ விடுவி!

வாழ்க்கை ஒரு
போராட்டம்
அதனுடன் நீ
போராடு!
வாழ்க்கை ஒரு
சவால்
நீ அதை சந்தி!

வாழ்க்கை ஒரு
துணிவு
அதை நீ ஏற்கத்
துணி!
வாழ்க்கை ஒரு
சத்தியம்
அதை நீ கடைப்பிடி!

வாழ்க்கை ஒரு
சந்தர்ப்பம்
நீ அதை பயன்படித்துக்கொல்!

தீராத பசி


காற்றை மட்டும்
கடித்துத் தின்ன முடிந்தால்..
யாருக்கும் இருக்காது பசி !


கடலை மட்டும்
அள்ளிக் குடிக்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தாகம் !


தேவைகளை மட்டும்
தீர்க்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தேடல் !


இன்பம் மட்டுமே
வாழ்வாகிப் போனால்
கொஞ்ச நாளில்
இன்பமாய் இருப்பதே
துன்பமாகக் கூடும்


வெயிலும் மழையும்..
இரவும் பகலும்..
கதிரும் நிலவும்..
ஆணும் பெண்ணும்..
தீயும் நீரும்..
சந்தோஷமும் சோகமும்..
புன்னகையும் அழுகையும்..
ஒரு அர்த்தத்தொடே படைக்கப்பட்டிருக்கின்றன


அதனால் எதற்க்கும் முரண்படாது
எளிதாய் ஏற்றுக்கொள்வோம்
அதனை அதன் வழியில்

வார்த்தைகளின் வலி

மனங்களே
போதும்போதும்
வேண்டாம்வேண்டாம்


உங்கள் பூவிதழ்களில்
மலரும் சொற்களில்
முட்களை விதைத்து
நடமாடாதீர்கள் மண்ணில்


வார்த்தைகளை விட வலிமையான ஆயுதமும்
சந்தேகத்தை விட கொடுமையான தாக்குதலும்
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை இந்த உலகில்


தோட்டாக்களின் வலி தாங்கும் இதயம்கூட
வார்த்தைகளின் வலியை தாங்குவதில்லை

தோட்டாக்களின் ரணம் ஆறக்கூடும்
வார்த்தைகளின் ரணம்…………


ஆம்உண்மைதான்

வார்த்தைகளும் கண்ணாடிகளும் ஒன்றுதான்
தவறி விழுந்துவிட்ட பின்
என்ன செய்தாலும் ஓட்ட முடியாது இரண்டையும்


உங்கள் உதடுகளை தாண்டி
நெருப்பு பூசி வந்து விழுந்து விடுகிற
அந்த பிழையான வார்த்தைகள்

சமாதானங்களாலும் மன்னிப்புகளாலும்
ஒருபோதும் சரியாகி விடுவதில்லை


சந்தோஷ துக்கங்களைத் தாண்டி
என்றும் நம் வாழ்வில்

நிஜப்பிரியங்களை தவிர எதுவும்
முழுதாய் திருப்தியை தருவதில்லை


அதனால் பிரியமாய் இருங்கள் எல்லோர் மீதும்
எப்போதும் காயப்படுத்தாதீர்கள் உங்கள் பாசத்துக்குரியவர்களை


பிரியம் ஒன்றே உறுதி செய்யும்
நம் இதயம் எப்படிப்பட்டதென்று

அன்பு பரிமாற்றம்


தூர இடைவெளிகளில்
கடைக்கண் பார்வைகள்
இதழ்கள் பிரியாத புன்னகை
சிறிய இடைவெளி சந்திப்புகளில்
தலைதாழ்த்திய ஆழ்ந்த மௌனங்கள்
மெல்லிய காதல் பரிமாற்றங்கள்

*ஊருக்கு வெளிச்சமிடும் உறவு
உடுப்புபிடி தனிமை தருணங்கள்
வாரி இறைக்கும் பொருட்ச் செலவுகள்
உடல்களின் சுவாசப் புணர்வு
இருவரின் இச்சை உதிர்வுகள்

காதலர்களின் பயணம்

இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .
இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட...

பார்ப்பதை நிருத்தாதே


பெண்ணே....
நான் உன்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தில்;
உன் உருவத்தை வரைந்து வைத்தேன்.
ஆனால்;
நீ என்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தையே;
உன் உருவமாக செதுக்கிவிட்டேன்.

பார்ப்பதை நிருத்தாதே......!

கனவே கதி


பஞ்சு மெத்தையில்-
நிம்மதியாக தூங்கும் உனக்கு;
என்னை பற்றிய.....
கனவு வருவதே இல்லை.
ஆனால்;
உன்னை பார்த்த-
நாள் முதல்;
தூக்கத்தை இழந்த நான்.....
கனவே கதி என்று கிடக்கிறேன்!

எனது துக்கம்


அப்போது -
உன் நினைப்பால்;
எனக்கு தூக்கம் கூட.....
ஒரு கனவாகவே இருந்தது.
ஆனால்......
இப்போது-
உன் நினைவுகள் நிரைந்த;
என் கனவுகளும் என்னோடு .....
சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது!

மரமண்டையன்


விதை விழுந்த கணம்
எனக்குள்
மரமாய் முளைத்த அதிசயம்
நீ !
- இதனால் தான் என்னவோ என்னை மர மண்டையன் என்று அழைக்கிறாய்...

நமக்குள் உள்ள இடைவெளி


எனக்கும் உனக்கும்
உள்ள இடைவெளி
குறைகிறது,

என் கனவுகளில் நீயும்
உன் நிணைவுகளில் நானும்
வசிக்கத்தொடங்கும் பொழுது

நீண்ட நேர காத்திருப்பின்
பிறகு சண்டையிடும் நேரம்
கூடும் பொழுது

உன் முத்தத்தின் சத்தம்
குறையும் பொழுது

நீ இல்லாத பொழுதுகள்
எனக்கு வலிக்கும் பொழுது

எனக்கும் உனக்கும்
உள்ள இடைவெளி
குறைகிறது

எனதுயிரை


கடைசி
வரை
போரடியும்
முடியவில்லை
என்னால்
உனதன்பைப் பெற!

நீயாவது
பெற்றுக்கொள்
எனதுயிரை!

வெற்றிக்கு வழி

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால்
சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம்

நான் கண்ட தேடல்

காதலும் மோதலும்
காவியத்தில் சிறந்தது

அன்பும் ஆசையும்
காதலிக்கும் போது பெரியது

கண்டிப்பும் பரிதவிப்பும்
காதலில் உயர்ந்தது

நியாபகமும் மறதியும்
காதலின் இறுதியில் உணர்வது

கோபமும் வெறுப்பும்
காதலித்த பின் வருவது

உறவும் உயிரும்
மணமான பின் புரிவது

பாசத்தை நேசித்தால் யோசிக்காமல் வருவது தான்
இதயமெனும் கூண்டில் உதயமாகும்

இன்பமான காதல்
இது தான்
நான் விரும்பும் காதலில்
நான் கண்ட தேடல்...

Thursday, September 15, 2011

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டவில்லை என்றாலும் தண்ணீர் இல்லாமல் தாமரை இல்லை நீயும் நானும் அருகில் இல்லை என்றாலும் உன் அன்பு இல்லாமல் நானும் இல்லை...
நம் எண்ணங்கள் எதுவே நமது செயலும் அதுவே...எதுவே நமது செயலும் அதுவே...

கணினி

இந்த உலகத்தயே
உங்கள் கண்முன்
கொண்டு வந்து
காட்டுகிறேன் என்று
மகள் கூற
...
தந்தை கேட்டார்

அதற்கு இப்போது
என்ன வேண்டும்
சொல் நீ

மகள் கேட்டால்
ஒரு மடி கணினி

பார்த்தவுடன் பழகாதே .....!
பழகியவுடன் இணையாதே.....!
இணைந்தவுடன் பிரியாதே.....!
பிரிந்தவுடன் வருந்தாதே .....!
வருந்தியவுடன் தேடாதே .....!
தேடி கிடைத்தால்.....!
மீண்டும் தொலைக்காதே....!



நீ யாரென்று
தெரியாமல் தொடங்கிய
கதையில்
நான் யாரென்றே தெரியாமல்
போய்விட்டது...

உன்னை நேசிபவர்களை வெறுக்க காரணம் தேடாதே
அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்பம் தேடு..

பார்த்து பார்த்து பழகும் நிமிடங்களை விட
பார்காமலே இருக்கும் நிமிடங்களில் தான் ப்ரியம் அதிகரிக்கும்...

முட்களின் பாதுகாப்பில்
மலர் மலர்ந்தாலும்,,,,,,,,,,
வாசத்தை சூறையாடும்
காற்றை கைதுசெய்ய முடியாது....

நாட்கள் மாதங்களாகலாம்
மாதங்கள் வருடங்களாகலாம்
அதனால் என்ன
என் நட்பு
குறைந்துவிடவா போகிறது
நட்புகேது
காலமும்..... நேரமும்

எங்கே கற்றுக்கொண்டாய்....../
இப்படி வார்த்தைகளால்
மழை தூவ....../
என் இதயமெல்லாம்
நனைகிறதடி....

தேடி கிடைத்தாலும்
தேடாமல் கிடைத்தாலும்
உன்னை போன்ற உறவுகளை தொலைக்கவும் மாட்டேன்
ஏன் ஆயுள் உள்ளவரை மறக்கவும் மாட்டேன்...

உன் கஷ்டங்களை மற்றவர்களிம் சொல்வதை விட
உன் சந்தோசங்களை சொல்லி பார் அப்போது தான் உன்
கஷ்டத்திலும் அவர்கள் உனக்கு உதவி செய்வார்கள்...

இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது..

என் குழந்தைக்கு
அவள் பெயரை
வைக்க நினைத்திருந்தேன்
இப்போது பயமாய்
இருக்கிறது

எங்கே இவளும்
அவளைப்போல
பிரிந்து மறந்து
விடுவாளோ என்று...

உன்னை என் கண்கள்
வெறுத்தாலும் என் இதயம்
உன் நிழல் காண துடிக்கிறது...

சுவாசிப்பதை மறந்தால் தான்
உன்னை நேசிப்பதை மறப்பேன்...




உன் கோபம்
என்னை கவலை
கொள்ள செய்கிறது
தேவையற்ற உன் கவலை
என்னை கோபம்
கொள்ள செய்கிறது...  
மனிதனால் முடியாதது
எதுவுமில்லை...இது உண்மை தான்
ஆனால்
மனிதனால் முடியாதது
மனிதனாக இருபது தான்...

நான் சொல்வது உண்மை தானே...

இனிய காலை வணக்கம்...

காதல்


காதலென்பது என்னவென்று
நாம் காதலித்தவரை
தெரியாது
ஒரு முறை கூட
சொல்லி கொண்டதில்லை
உன்னிடத்தில் நானும்
என்னிடத்தில் நீயும்
உன்னை நான் காதலிக்கிறேன் என்று
இன்று இதற்கென்றே சில
இலக்கணங்கள்
நம் இளைய தலைமுறை
தெரிந்து கொள்ளட்டும்
இவைகளில் ஓன்று கூட
நமக்குப் பொருந்தாது
தொலைவில்
இருந்தாலும்
தொலைந்து போனாலும்
தொல்லை தந்தாலும்
தொடர்ந்து வருமே
நம் காதல்
சாதலற்ற தேடல்
.
உன் உள்ளங்கை ரேகை எனும்
ஒற்றையடிப் பாதை வழியே
தொடரும் என் பயணத்தில்
எனக்கான வழித்துணையாய்
எப்போதும் வருவது
உன் நினைவுகளன்றி
வேறென்ன சகியே..

உன் உச்சந்தலை வகிடு வழியே
உயிருக்குள் இறங்கும் என் முத்தங்கள்
உன்னத மெல்லிசை சிந்த
உன் வெட்கங்கள்தானடி ஜதியே..

சாதலற்ற தேடல் கொண்ட காதல் வாழ்த்துக்களோடு



காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு
என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்

என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்
உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும்
புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும்
அழகை மட்டுமல்லாது அன்பையும்
அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் !



ஆனால் நீயோ
என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம்
நானுன் ரசிகை என்கிறாய் !



தீராத பசிகொண்ட
என் ரசனைகளுக்கு
திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள்
நீதான் என்னும் உண்மை
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

கடிகார முள்ளைப்போல்
ஒரு நொடிகூட நில்லாமல்
உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்
என் நினைவுக் குதிரைக்கு
பாசக் கடிவாளமிட்டு
அதன்மேல் ஒய்யாரமாய்
பயணம் செய்கிறாய்



பள்ளத்தில் பாயும்
நதியின் சலசலப்பைப்போல்
ஓயாமல் எப்போதும்
எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ



சட்டென சிலநாள்
பாசி படிந்த குளம்போல்
மௌனித்திடும் பொழுது
மரண பயம்கொண்டு
ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்



புதிதாய் பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில்
அதோடு ரசித்து ரசித்து விளையாடி
பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து
அதை ஓரமாய் வைத்துவிட்டு ஓடிப்போகும்
குழந்தையின் மனநிலையில்
ஒருவேளை விழுந்துவிட்டாயோ என நான்
அறிய முற்படுகையில்



முரட்டு வார்த்தைகளால்
என்னை முறித்துப் போடுகிறாய்



உன் சின்ன சின்ன வரிகள்
என்னை சீக்கிரம்
சாகடிக்கத் தொடங்கும் முன்



வானமளவு நிறைந்து
பூமியையே பகிர்ந்து
பூக்களைப்போல் திறந்து
மற்றதெல்லாம் மறந்து
நாம் பேசிய பழகிய நாட்களில்
உனக்கு தெரியவில்லையா

நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று

உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும்
தோழனின் மேல் நண்பன் கை இருந்தால்...      

Wednesday, September 14, 2011

சோகம் என்பது மேகம்
அது சொல்லாமல் போகும்

ஆனால்
சந்தோசம் என்பது வானம்
அது நிலையானது...
MOUNTAINS CAN FLY! OCEANS CAN DRY! YOU CAN FORGET ME! HOW CAN I!!!

உனது தாயின் இதயம் மட்டும் தான் அது இறந்த பிறகும் துடிக்கும் நீ நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக...
Ennai theadi neengal vanthaal piragu ungalai theadi ulagam varum sonnathu...
Noolagam...