Monday, October 31, 2011

AMMA


அன்புக்கு
இலக்கணமும்
நீ தான்
தமிழ் பண்புக்கு
புத்தகமும்
நீ தான்
கற்புக்கு
கண்ணகியும்
நீ தான்
பொறுமைக்கு
பூமியும்
நீ தான்
கண்டிப்பதில்
கிட்லரும்
நீ தான்
அன்புக்கு அன்னை
திரேசாவும்
நீ தான்
படி என்று
சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்
வீட்டில் இராட்சியத்துக்கு
அரசியும்
நீ தான்
அன்போடு
பேசும் தோழியும்
நீ தான்
பூமியில் வாழும்
உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்

No comments:

Post a Comment