Friday, November 18, 2011

என் அருகே நீ இருப்பதாய் நினைத்து

யாரோ ஒருவரால்
உச்சரிக்கப்படும்
உன் பெயரைக்கேட்டு
என் விழிகள் ஏனோ
திரும்பிபார்க்கின்றன
தேடுகின்றன
என் அருகே நீ இருப்பதாய் நினைத்து...

Wednesday, November 16, 2011

உன்னையே உனக்கு பிடிக்கும்

சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்

ஆனால்

உண்மையான அன்பு கிடைக்கும் போது தான் உன்னையே உனக்கு பிடிக்கும்...

Tuesday, November 15, 2011

அது 60 வயசு கெழவி மச்சி

திரும்பி
திரும்பி
பார்க்க வைத்தது

திரும்பாத
அவளின் முகம்
ஆனால்
அவள் திரும்பியதும் மாறியது
என் முகம்

அவ்வ்வ்வ்
அது 60 வயசு கெழவி மச்சி...

பட்டாம்பூச்சியென

பட்டாம்பூச்சியென இமையடிக்கும்
உன்னிரு விழிகளில்
எனைத் தொலைக்கவா
இத்தனை வருடம் தவமிருந்தேன்…

அழ வைப்பது

அழ வைப்பதும் அலைய வைப்பதும் காதலின் செயல்
அன்பு செலுத்துவதும் ஆறுதல் சொல்வதும் நட்பின் செயல்...

அன்புக்கும் ஆசைக்கும் வித்தியாசம்

அன்புக்கும் ஆசைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்...
ஒருவரை பிடிக்க காரணம் இருந்தால் அது ஆசை
காரணம் இல்லாமல் ஒருவரை பிடித்திருந்தால் அது அன்பு...

உன் நினைவு

உன்னிடமிருந்து யார் யாரோ
எதை எதையோ
எடுத்துச் செல்வார்கள் !
ஆனால்
நான் மட்டும் எதையும் எடுத்துச் செல்லமாட்டேன்
உன் நினைவுகளை தவிர ....

கன்னுக்கு எட்டாத தூரத்தில் நீ

கன்னுக்கு எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும்
கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்லும்
உன் நினைவுகள் தான் நாம் அன்புக்கு
இன்னும் உயிர் கொடுத்து கொண்டிருக்கிறது...

உனக்க மட்டும்

நைசாக பேசி சைசாய் என் இதயத்தை லவிவிட்டையே கண்ணே
என் இதயம் கூட உனக்க மட்டும் துடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமா?

நம்முடைய நினைவுகள்

விரிந்து கொண்டே செல்கிறது
எல்லைகளற்ற வானத்தில்
நம்முடைய நினைவுகள்...

உன் பார்வை

காதல் பேசிய உன் கண்கள்
நடனம் புரிந்த உன் இமைகள்
கொள்ளை போனது என் இதயம்
திசை மாறியது உன் பார்வை
தடுமாறியது என் வாழ்வு…

என் அன்பு உனக்காக

காலம் கடந்து கனவுகள் கலைந்துகரை காணும் நேரம்
நிச்சயம் இணைந்திடுவாய் மீண்டும் நீ என்னோடு….
அதுவரையில் என் அன்பு காத்திருக்கும் உனக்காக….

கண்ணில் ஈரம் படாமல்

காலில் ஈரம் படாமல் கடலை கடந்தவர் இருக்கலாம்
ஆனால்
கண்ணில் ஈரம் படாமல் வாழ்க்கையை கடந்தவர் யாரும் இல்லை...

Monday, November 14, 2011

உன் நினைவுகளை தவிர

உன்னிடமிருந்து யார் யாரோ
எதை எதையோ
எடுத்துச் செல்வார்கள் !
ஆனால்
நான் மட்டும் எதையும் எடுத்துச் செல்லமாட்டேன்
உன் நினைவுகளை தவிர ....

Saturday, November 12, 2011

என் அன்பு காத்திருக்கும் உனக்காக

காலம் கடந்து கனவுகள் கலைந்துகரை காணும் நேரம்
நிச்சயம் இணைந்திடுவாய் மீண்டும் நீ என்னோடு….
அதுவரையில் என் அன்பு காத்திருக்கும் உனக்காக….

Friday, November 11, 2011

நான் உனது நண்பன் என்று


நண்பா நீ வெற்றி பெறும் போது பெருமையாய் சொல்வேன் மற்றோரிடத்தில் "அவன் என் நண்பன்" என்று . ஆனால் நீ தோல்வி தழுவும் போது உன் அருகில் அமர்ந்து சொல்வேன் நான் உனது நண்பன் என்று

Thursday, November 10, 2011

நாளைய இன்பங்களுக்கு வழி

தன மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை ஒரு சிற்பமாக மற்றும் என்று கல்லுக்கு தெரியாது...
அது போல தான் வாழ்கையில் இன்றைய கஷ்டங்கள் நாளைய இன்பங்களுக்கு வழி...

என் இதயம் சரிந்தது

காற்றடித்ததில் மணல்
சரிந்தது...!
நீ கண் அடித்ததில்
என் இதயம்
சரிந்தது...

வாடும் வரை

பூவின் அழகு வாடும் வரை
நிலவின் அழகு தேயும் வரை
உறவின் அழகு சாகும் வரை
காதலின் அழகு கண்ணீர் வரை
நட்பின் அழகு நீங்கள் என்னை மறக்காத வரை...

சுமப்பது தான் கவிதை

வார்த்தைகளை சுமப்பது தான் கவிதை
வருத்தங்களை சுமப்பது தான் வாழ்க்கை
கற்பனையோடு வாழ்பவன் கவிஞன்
காயங்களோடு வாழ்பவன் மனிதன்...

எனகென்ன அதான் நீ இருக்கியே

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம்
உனக்காக மட்டும் இருப்பேன் என்பது காதல்
எனகென்ன அதான் நீ இருக்கியே என்பது தான் உண்மையான நட்பு...



பிரிவை

நாம் பிரிவை
எழுத பேனா எடுத்தேன்
அதிலும் மை திர்த்து விட்டது
நாம பிரிவை அதுவும் சொல்ல
விருப்பம் இல்லையோ ....

Wednesday, November 9, 2011

நீ எங்கிருந்தாய்

என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?

நீ இருக்கியே

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம்
உனக்காக மட்டும் இருப்பேன்  என்பது காதல்
எனகென்ன அதான் நீ இருக்கியே என்பது தான் உண்மையான நட்பு

Monday, November 7, 2011

புன்னகை

உன் வாழ்கை முழுவதும்
உன்னுடன் வாழ விரும்புகிறேன்
கோபத்தில் என்னை விட்டு விடாதே

இப்படிக்கு புன்னகை... :)

Sunday, November 6, 2011

போதாது உன் குறும்புகளடி

வண்ண மயிலிறகின் மேனியடி – நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி – உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி – உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி – உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி – உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி – என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி – முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது… போதாது உன் குறும்புகளடி

Saturday, November 5, 2011

இளகிய மனது


உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது

அன்பு கொண்ட நீ

அன்பு கொண்ட நீ அருகில் இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள்
உள்ளவரை உன் தொலைவும் ஒரு சுகம்தான்...

Thursday, November 3, 2011

உண்மையான அன்பின் அடையாளம்

கண்கள் பார்த்து அனுபவிக்கும் பல இன்பங்களை விட
நம் இதயத்தில் நினைத்து அனுபவிக்கும் ஒரு சுகமான
நினைவுகளே உண்மையான அன்பின் அடையாளம்...

உண்மை

பலமுறை பார்த்து ஒரு முறை நினைப்பதை விட
ஒரு முறை கூட பார்க்காமல் பலமுறை நினைப்பது தான் உண்மையான அன்பு...

Wednesday, November 2, 2011

காத்திருப்பு

காரணமற்ற காத்திருப்புக்களால் கரைந்து செல்கிறது வாழ்க்கை... பின் கடந்து வந்த பாதைகளை கவனித்து பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே...

Tuesday, November 1, 2011

வாழ்கை


வாழ்கையின் அர்த்தம் புரிவது கஷ்டம்
ஆனால், வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தால்
வாழ்வது கஷ்டம்,
வாழ்க்கையை புரிந்துகொள்வதும்
புரிந்துகொள்ளததும் உங்கள் இஷ்டம்...

Monday, October 31, 2011

காத்திருத்தல்


நேற்றுவரை அம்மாவின் சோறு இனித்தது
இப்போது அதுவும் புளிக்கிறது
காலையில் சாப்பிட்ட காப்பி மட்டும்தான் கனக்கிறது இன்னும்..
நீ விட்டுப்போன நினைவுகளோடு
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று….

கவிதை வரி


உச்சந்தலையில் சிலிர் என்ற சிலிர்ப்பொடு
இரங்கும் முதல் துளி மழை போல்
என்றோ நீ வாசிதத அந்த கவிதை வரிகள்
தமிழ்தாய் வாழ்த்தாய் காதுகளில் ஒலிக்க
அன்றைய பொழுதை துவக்குவேன்

AMMA


அன்புக்கு
இலக்கணமும்
நீ தான்
தமிழ் பண்புக்கு
புத்தகமும்
நீ தான்
கற்புக்கு
கண்ணகியும்
நீ தான்
பொறுமைக்கு
பூமியும்
நீ தான்
கண்டிப்பதில்
கிட்லரும்
நீ தான்
அன்புக்கு அன்னை
திரேசாவும்
நீ தான்
படி என்று
சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்
வீட்டில் இராட்சியத்துக்கு
அரசியும்
நீ தான்
அன்போடு
பேசும் தோழியும்
நீ தான்
பூமியில் வாழும்
உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்

உன் கண்ணீர்


ஒரு துழியாய் எட்டிப்பார்த்தாய்
வெளிவராது கதவடைத்தேன்
ஆனால் எனக்கு தெரியும்,
எப்போதாவது ஒரு நாள்
நீ வெள்ளமாய் உருவெடுப்பாய்
அன்று என் கதவுகளுக்கு பலம் வராது
உன்னை தடுப்பதற்கு
வந்தது நேரம்,
என் இமைக்கதவுகள்
பலமிழந்து விட்டது
உன் கண்ணீர் அருவியின் முன்

திறமை & தன்னம்பிக்கை

முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை
முடியாததை செய்ய முயற்சி செய்தால் அது தன்னம்பிக்கை...

Monday, October 24, 2011

உலகை விட பெரியது


உலகம் என்பது மிக பெரியது
அதில் வாழும் உயிர்கள் மிக சிறியது
அதுபோல
நமது உடலும் உயிரும் சிறியது
ஆனால் நமது நட்பு
உலகை விட பெரியது...

Thursday, October 20, 2011

உண்மை அன்பு


நமக்கு மிகவும் பிடித்தவர்கள்
நம்முடன் இருக்க வேண்டும்
என்று ஆசைபடுவதை விட
நலமுடன் இருக்க வேண்டும் என்று
ஆசைபடுவதே உண்மையான அன்பு...

Wednesday, October 19, 2011

சிறந்த காதல்

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க
கற்றுகொள்...
இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்...

Saturday, October 15, 2011

உங்கள் நட்பு

காயம் இல்லாமல்
காதல் இல்லை
ராகம் இல்லாமல்
பாடல் இல்லை
உயிர் இல்லாமல்
உடல் இல்லை
பாசம் இல்லாமல்
மனிதன் இல்லை
உங்கள் நட்பு இல்லாமல்
நான் என்றும் இல்லை...

Friday, October 14, 2011

போராடி

தோல்வியோடு போராடி
ஜெயிக்கும் வெற்றியில்
தான் பலம் இருக்கும்
முயற்சியோடு போராடி
ஜெயிக்கும் மனதில் தான் சாதனை இருக்கும்...

Tuesday, October 11, 2011

எனக்குள்

எனக்குள் ஒரு வசந்தம் உன் வரவு
எனக்குள் ஒரு மற்றம் உன் நினைவு
எனக்குள் ஒரு இன்பம் உன் உறவு
எனக்குள் ஒரு துன்பம் உன் பிரிவு...

உன்னை நேசிக்கும் இதயத்தில்

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள்
வாழ்வதை விட

உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள்
வாழ்ந்து பார்

ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரை சொல்லும்...

Sunday, October 9, 2011

நிறைய விஷயங்களும்

கடற்கரை அலைகள்
காலைத்தொட்டு
வணங்குகிறது
என்பதற்காக
அதனை நம்பி
கடலுக்குள்ளே இறங்குவது
புத்திசாலித்தனமில்லை

வாழ்க்கையில்
நிறைய விஷயங்களும்
அப்படித்தான்...

Saturday, October 8, 2011

அன்பு காட்டி

அன்பு காட்டி தோதவர்கள் இல்லை
கோபம் காட்டி ஜெயித்தவர்கள் இல்லை...

ஒரு தலை காதல்:

நெடு தொலைவில் இருந்து ஒரு வெளிச்சம் என் மேல்
கண்டேனடி நான்  உன்னை அந்த ஒரு நொடி போதுதில்

என்னையே மறந்தேன் என் இதயத்தை உன்னிடம் தொலைத்தேன்
நிலவை சுற்றி வரும் நட்சத்திரங்கள் போல உன்னையே

சுற்றி சுற்றி வந்தேன் உனக்கு தெரியாமலே
மனசுக்குள் மத்தாப்பு உன்னுடைய பொன் சிரிப்பு

இதயத்துக்குள் ஏதோ ஒரு போராட்டம் உன்னை நினைத்து
பல எதிர்பார்புகளோட என் காதலை உன்னிடம் சொல்ல துணிந்தேன்

மனதை திடமாக்கினேன் கனவுகளில் நீந்தினேன் 
நீ சொல்லும் பதிலுக்காக நொடிகளை கடந்தேன்

விடிந்தது என் இதய துடிப்பு அதிகமானது
அளவுக்கு அதிகம் வியர்ந்தது மெல்ல மெல்ல உன்

அருகே வந்து கண்ணாடி முன் கொட்டிய வார்த்தைகளை
கண் மூடி கொண்டு உன்னிடம் ஒப்பித்தேன் உன் பதிலை எதிர் பார்த்து

அதற்கு அவள் சொன்ன பதில்
டே பொறுக்கி நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல
செருப்பு பிஞ்சிரும் ராஸ்கல்

இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்
காதல சொன்ன பாட்ட காட்டுவளுங்க காதலிச்ச பிறகு டாட்டா காட்டுவளுங்க...

ஒரு போதும் அழிவதில்லை


காற்றுக்கூட நுழைய முனைந்து
தோற்றுப்போகும் நெருக்கம்
நம் நட்பில் கண்டோம்.....
நேற்றைய பொழுதின் நினைவுகள்
ஒற்றையாய் என் மனப்பூங்காவில்....

கடந்தகாலத்தை எண்ணிப் புன்னகைக்கவா...?
இழந்து போன எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் விடவா...?
ஒன்று நிச்சயம் உனதான நினைவுகள் ஒரு போதும் அழிவதில்லை

நீ அறிந்து கொள்வாய்

உனக்கு பிடிக்கும் பலரிடம் பழகுவதை விட
உன்னை பிடிக்கும் ஒருவரிடம் பழகிபார்
உன்னையே நீ அறிந்து கொள்வாய்...

வலி

கண்ணீரை சிந்தும் கண்களை விட அதை மறைத்து
புன்னகை செய்யும் இதழுக்கே வலி அதிகம்...

Friday, October 7, 2011

நீ கூறிய வார்த்தையால்

படர்ந்து கிடக்கும்
பச்சை வயல் வெளியில்
பணித்து நிற்கும் ஒற்றை கொக்காய் நான்

நிரம்பி வழியும் நீரளியில்
நிரந்தரமற்ற நுரையை நான்

சிறகடிக்கும் சிட்டுகுறிவியின்
சிதறிபோகும் சிறகாய் நான்

மலர்களின் மடியில்
மறைந்திடும் பனித்துளியாய் நான்

இத்தணையும் அன்று நீ கூறிய வார்த்தையால்
நான் எடுத்த ஜென்மங்கள் மறைந்துவிடு மனமே...

தலைக்கனம் வந்ததில்லை


எழுது கோல்கள் மாறினாலும்
என் எழுத்துகள் மாறுவதில்லை
விரல்களில் காயம் என்றாலும்
என் எழுத்துகளுக்கோ ஓய்வில்லை
எழுத்துகளில் பிழை வந்தாலும்
பொருளில் பிழை என்றுமில்லை
காலம் மாறினாலும் நான்
கவி எழுத தவறியதில்லை
எடுத்துச்சொல்லும் எனக்கோ
என்றும் தலைக்கனம் வந்ததில்லை

Thursday, October 6, 2011

கிணற்று நீறை

கிணற்று நீறை போல் ஒருபோதும் சிறைபட்டு கிடக்காதே
ஆற்று நீறை போல் ஓடிகொண்டே இரு
தோல்வி உன்னைவிட்டு தொலைவில் செல்லும்...

கிணற்று நீறை

கிணற்று நீறை போல் ஒருபோதும் சிறைபட்டு கிடக்காதே
ஆற்று நீறை போல் ஓடிகொண்டே இரு
தோல்வி உன்னைவிட்டு தொலைவில் செல்லும்...

வெறுக்காமல் இருக்க

நினைத்து கொண்டே இரு
உன்னை யாரும் மறக்காமல் இருக்க
சிரித்து கொண்டே இரு
உன்னை யாரும் வெறுக்காமல் இருக்க...

ஊசடுபவளே

என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நிதமும் ஊசடுபவளே
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை
நின்று விடும் என் ஓட்டம்...                                                   

தேவை இல்லாதது

இன்று "நீ" வருத்தப்பட்டு கொண்டிருக்கும்
ஒரு விஷயத்தை நாளை நினைத்துப்பார்
அது தேவை இல்லாதது என்று
உனக்கே புரியும் ...

Wednesday, October 5, 2011

உன் உண்மை காதலில்

காதலை தேடி நீ ஓடாதே, தோற்று விடுவாய் வாழ்கையில்
வாழ்க்கையை தேடி நீ ஓடு, வென்றுவிடுவாய் உன் உண்மை காதலில்...

Tuesday, October 4, 2011

நாம் விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும்
ஆனால்
உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர் பார்க்கும்...


என் உயிராக

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
ஜனனம் ஒன்று இருந்தால் அதில்
நியே வேண்டும் உறவாக இல்லை
உயிராக...

யார் நீ

நீ யாரென்று
தெரியாமல் தொடங்கிய
கதையில்
நான் யாரென்றே தெரியாமல்
போய்விட்டது...

உன் நினைவுகளை

என் அருகே நீ இருந்தாலும் இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு
வைத்திருப்பேன் உன் நினைவுகளை...

Monday, October 3, 2011

உன் நினைவு என்றும் என் மனதில் தான்

நிலவு விண்ணில் இருந்தாலும் அதன் வெளிச்சம் என்றும்
பூமியல் தான் இருக்கும் அது போல
நீ எங்கு இருந்தாலும் உன் நினைவு என்றும் என் மனதில் தான்...

Friday, September 30, 2011

இதயத்தின் வலி

என்னை விரும்பிய பல உயிர்களை
நான் வெறுத்திருக்கிறேன்
நான் விரும்பிய உயிர்
என்னை வெறுக்கும் போது
தான் உணர்கிறேன் இதயத்தின் வலியை....


என் ஆயுளுக்கும் போதும்

மறைக்கவோ மறக்கவோ
இயலாத ஒன்று
உன்னுடன் குறைவாக பேசிய
எனக்கே எனக்கான தருணங்கள்
எதிர்பாராத சமயத்தில் கிடைத்த
உன் பாராட்டுக்கள்
எதிர்பார்த்து ஏமாந்த
சில நிமிடங்கள்
புரிந்தும் புரியாதது போல் சில உணர்வுகள்
கவிதைகளால் பேசிய சில வரிகள்
நான் மட்டுமே அனுபவித்த
உன்னோடு கழித்த அந்த நொடிகள் 
எனக்கு மட்டுமே கிடைத்த நீ
இனி என்ன வேண்டும்
எனக்கு இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
போதும், என் ஆயுளுக்கும்...

Thursday, September 29, 2011

உண்மையான அன்பு

விரும்பும் போது விரும்புகிறேன் என்பதை விட வெறுத்த போதும் விரும்புகிறேன் என்பதே உண்மையான அன்பு...

வெற்றியின் முதல்படி

நமக்கு அமைவது தான் வாழ்க்கை என்று எண்ணாமல்
நாம் அமைத்து கொள்வது தான் வாழ்க்கை என்று
முடிவெடுங்கள் அது தான் உங்கள் வெற்றியின் முதல்படி...

உன்னை போல

என்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
என்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
................உன்னை போல.................

Wednesday, September 28, 2011

உயிராக

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகிறது
என்றால் நீ யாரையே நேசிக்கிறாய்
என்று அர்த்தம் உண்மையாக அல்ல உயிராக...

நீ இல்லாத நொடிகள்

அன்பின் ஆழம் எவ்வளவு
என்பது பிரிவின் போது தான் தெரியும்
அதை உணர்கிறேன்
நீ இல்லாத ஒவ்வெரு நொடிகளிலும்...

உன் மௌனம்

ஒரு துளி ரத்தம்
கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவரின்
"மௌனம்"...

Tuesday, September 27, 2011

உனக்காக நான் இருப்பேன்

உன் உயிரில்
உன் மனதில்
உன் கணவில்
உன் நினைவில்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரும் இல்லாத போது உனக்காக நான் இருப்பேன்...

Monday, September 26, 2011

நேசித்தவர்கள்

நேசித்தவர்கள்
எல்லாம் நம்மோடு
நிலைத்துவிட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வழியும்
நம்மால் உணரமுடியமலே
போய்விடும்...

மறந்துவிடு

நன்மை செய்தால்..
துரோகத்தை மறந்துவிடு..!
நண்பன் செய்தால்
குற்றத்தை மறந்துவிடு…!
காலம் தந்தால்…
சோகத்தை மறந்துவிடு..!
காதல் தந்தால்…
காயத்தை மறந்துவிடு..!
இன்பம் தந்தால்…
இன்னல்கள் மறந்துவிடு…!
பிரியம் தந்தால்…
பிரிவை மறந்துவிடு..

Sunday, September 25, 2011

அன்பின் அருமை

உயிரின் அருமை உடலை விட்டு பிரியும் போது தெரியும்
அன்பின் அருமை நாம் நேசிக்கும் ஒருவர் அருகில் இல்லாத போது தெரியும்...

Saturday, September 24, 2011

மௌனம்

ஒரு மனிதனை தாக்கும்
மிக பெரிய ஆயுதம்
அவனுக்கு பிடித்த ஒருவரின் மௌனம்...


Friday, September 23, 2011

உழைப்பின் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு கலையின் பின்னும்
ஒரு உழைப்பு மறைந்து கிடக்கிறது
ஒவ்வொரு உழைப்பின் பின்னும்
பாராட்டு என்னும் எதிர்பார்ப்பு மறைந்து கிடக்கிறது

என்றும் வளர்பிறையை நீ

வெண்ணிலா
வானத்தில் இருக்கும் பொழுது
என் மனதில் நீ

கவலைபடாதே
அம்மாவாசை அன்று மறைந்து விடமாட்டாய்
ஏனெனில்

என்றும் என் மனதில் நீ "வளர்பிறையை"

Thursday, September 22, 2011

வெற்றி

வெற்றியை நோக்கி செல்லும் போது திரும்பி பார்காதே
ஆனால்
வெற்றியை அடைந்த பிறகு திரும்பி பார்க்க மறந்து விடாதே...

என் அருகே நீ

நிலவை பார்க்கும் போது நீ என்னை விட்டு தூரத்தில் இருபதாக உணருகிறேன்
என் நிழலை பார்க்கும் போது தான் தெரிகிறது  நீ என்னோடு இருக்கிறாய் என்று...

Wednesday, September 21, 2011

உண்மையாய் இருப்பவர்களை

பழகி பாசம் காட்டுவது போல் பகல் வேஷம் போடுபவரை வரவேற்கும் இவ் உலகம் .. உருத்தெரியாமல் உடைத்து விடுகிறது.. உண்மையாய் இருப்பவர்களை...

என்னை விட்டு பிரியாது

காற்றோடு கலந்து விட்ட
போக்களின் வாசமும்
என்னோடு கலந்து விட்ட
அவளின் நேசமும் என்றும் பிரியாது...

தொலைகதே

பார்த்தவுடன் பழகாதே .....!
பழகியவுடன் இணையாதே.....!
இணைந்தவுடன் பிரியாதே.....!
பிரிந்தவுடன் வருந்தாதே .....!
வருந்தியவுடன் தேடாதே .....!
தேடி கிடைத்தால்.....!
மீண்டும் தொலைக்காதே....!

Tuesday, September 20, 2011

கண்ணீர் சிந்தாதே

நீ யாருக்காவும் கண்ணீர் சிந்தாதே
உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள்
உன்னை அழ விடமாட்டார்கள்...

என் கவிதைகள்

உன் முன்னால்
தொலைந்து போன
என் வார்த்தைகளை
தேடிப்பிடித்து
கவிதைகளாக்குகிறேன்
உனக்காகவே !
கண்டெடுக்க உதவிய
உனக்கு
சமர்பிக்கவே !

Monday, September 19, 2011

கண்

கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு
கண்ணுக்கு உலகம் தெரியும்
கண்ணீருக்கு உள்ளம் தெரியும்...

மரமாக நான் இருப்பேன்

நீ வாடிய மலராக இருந்தால் நீ உதிரும் நேரத்தில் உன்னை தாங்கி பிடிக்கும் மரமாக நான் இருப்பேன்...

என் மேல் உன் பார்வை பட்டதால்

தென்றலும் என்னை தொடவில்லை
குளிர் மழையும் என்மேல் விழவில்லை
இருந்தாலும் சிலிர்த்தேன்
என் மேல் உன் பார்வை பட்டதால்...

Sunday, September 18, 2011

புரியாத அன்பு

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்
ஆனால் சிலர் அன்பு புரியாது
அதை காலம் உணர்த்தும் போது கண்கள் கலங்கும்...

உன் அன்பு

அன்பு தண்ணீர் போல
தண்ணீர் தாகத்தை போக்கும்
உன் அன்பு சோகத்தை போக்கும்!!!

தனிமை பயணம்

இருக்கைகள் நிரம்பியது
இடைவெளியும் நிரம்பியது
நான் மட்டும் நிற்கிறேன்
நடை பிணமாக
நெரிசல் பேருந்தில்
ஓர் தனிமை பயணம்
அவள் வராத நாட்களில்...

Saturday, September 17, 2011

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை....

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை....

தொடர்கதையாய்

நீ படித்த
என் கவிதைகளோ
சிறுகதையாக
என்னுள் புதையுண்டுப்போன
படிக்காத கவிதைகளோ
தொடர்கதையாக‌...

சந்திப்பு

 பிரிந்த பின்பு சந்திக்கும் போது
பிரிவு ஒரு தவம்...
சந்தித்து விட்டு பிரிபவர்களுக்கு
சந்திப்பு ஒரு வரம்

Friday, September 16, 2011

KADAVULUKKUM IDAM KODUNGAL


கடவுளுக்கு கல்லூரியில் இடம் கொடுங்கள்,

அபோதுதான் உணருவான் நட்பின் அருமையை …..

இனி படைக்க மாட்டான் பிரிவு எனும்
கொடுமையை !!!!!!

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
கடமை
அதை நீ நிறைவேற்று!
வாழ்க்கை ஒரு
சோதனை
அதை நீ சமாளி!

வாழ்க்கை ஒரு
சோகம்
அதை நீ எதிர்த்து நீல்!
வாழ்க்கை ஒரு
புதிர்
அதை நீ விடுவி!

வாழ்க்கை ஒரு
போராட்டம்
அதனுடன் நீ
போராடு!
வாழ்க்கை ஒரு
சவால்
நீ அதை சந்தி!

வாழ்க்கை ஒரு
துணிவு
அதை நீ ஏற்கத்
துணி!
வாழ்க்கை ஒரு
சத்தியம்
அதை நீ கடைப்பிடி!

வாழ்க்கை ஒரு
சந்தர்ப்பம்
நீ அதை பயன்படித்துக்கொல்!

தீராத பசி


காற்றை மட்டும்
கடித்துத் தின்ன முடிந்தால்..
யாருக்கும் இருக்காது பசி !


கடலை மட்டும்
அள்ளிக் குடிக்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தாகம் !


தேவைகளை மட்டும்
தீர்க்க முடிந்தால்..
யாருக்கும் இருக்காது தேடல் !


இன்பம் மட்டுமே
வாழ்வாகிப் போனால்
கொஞ்ச நாளில்
இன்பமாய் இருப்பதே
துன்பமாகக் கூடும்


வெயிலும் மழையும்..
இரவும் பகலும்..
கதிரும் நிலவும்..
ஆணும் பெண்ணும்..
தீயும் நீரும்..
சந்தோஷமும் சோகமும்..
புன்னகையும் அழுகையும்..
ஒரு அர்த்தத்தொடே படைக்கப்பட்டிருக்கின்றன


அதனால் எதற்க்கும் முரண்படாது
எளிதாய் ஏற்றுக்கொள்வோம்
அதனை அதன் வழியில்

வார்த்தைகளின் வலி

மனங்களே
போதும்போதும்
வேண்டாம்வேண்டாம்


உங்கள் பூவிதழ்களில்
மலரும் சொற்களில்
முட்களை விதைத்து
நடமாடாதீர்கள் மண்ணில்


வார்த்தைகளை விட வலிமையான ஆயுதமும்
சந்தேகத்தை விட கொடுமையான தாக்குதலும்
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை இந்த உலகில்


தோட்டாக்களின் வலி தாங்கும் இதயம்கூட
வார்த்தைகளின் வலியை தாங்குவதில்லை

தோட்டாக்களின் ரணம் ஆறக்கூடும்
வார்த்தைகளின் ரணம்…………


ஆம்உண்மைதான்

வார்த்தைகளும் கண்ணாடிகளும் ஒன்றுதான்
தவறி விழுந்துவிட்ட பின்
என்ன செய்தாலும் ஓட்ட முடியாது இரண்டையும்


உங்கள் உதடுகளை தாண்டி
நெருப்பு பூசி வந்து விழுந்து விடுகிற
அந்த பிழையான வார்த்தைகள்

சமாதானங்களாலும் மன்னிப்புகளாலும்
ஒருபோதும் சரியாகி விடுவதில்லை


சந்தோஷ துக்கங்களைத் தாண்டி
என்றும் நம் வாழ்வில்

நிஜப்பிரியங்களை தவிர எதுவும்
முழுதாய் திருப்தியை தருவதில்லை


அதனால் பிரியமாய் இருங்கள் எல்லோர் மீதும்
எப்போதும் காயப்படுத்தாதீர்கள் உங்கள் பாசத்துக்குரியவர்களை


பிரியம் ஒன்றே உறுதி செய்யும்
நம் இதயம் எப்படிப்பட்டதென்று

அன்பு பரிமாற்றம்


தூர இடைவெளிகளில்
கடைக்கண் பார்வைகள்
இதழ்கள் பிரியாத புன்னகை
சிறிய இடைவெளி சந்திப்புகளில்
தலைதாழ்த்திய ஆழ்ந்த மௌனங்கள்
மெல்லிய காதல் பரிமாற்றங்கள்

*ஊருக்கு வெளிச்சமிடும் உறவு
உடுப்புபிடி தனிமை தருணங்கள்
வாரி இறைக்கும் பொருட்ச் செலவுகள்
உடல்களின் சுவாசப் புணர்வு
இருவரின் இச்சை உதிர்வுகள்

காதலர்களின் பயணம்

இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .
இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட...

பார்ப்பதை நிருத்தாதே


பெண்ணே....
நான் உன்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தில்;
உன் உருவத்தை வரைந்து வைத்தேன்.
ஆனால்;
நீ என்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தையே;
உன் உருவமாக செதுக்கிவிட்டேன்.

பார்ப்பதை நிருத்தாதே......!

கனவே கதி


பஞ்சு மெத்தையில்-
நிம்மதியாக தூங்கும் உனக்கு;
என்னை பற்றிய.....
கனவு வருவதே இல்லை.
ஆனால்;
உன்னை பார்த்த-
நாள் முதல்;
தூக்கத்தை இழந்த நான்.....
கனவே கதி என்று கிடக்கிறேன்!

எனது துக்கம்


அப்போது -
உன் நினைப்பால்;
எனக்கு தூக்கம் கூட.....
ஒரு கனவாகவே இருந்தது.
ஆனால்......
இப்போது-
உன் நினைவுகள் நிரைந்த;
என் கனவுகளும் என்னோடு .....
சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது!

மரமண்டையன்


விதை விழுந்த கணம்
எனக்குள்
மரமாய் முளைத்த அதிசயம்
நீ !
- இதனால் தான் என்னவோ என்னை மர மண்டையன் என்று அழைக்கிறாய்...

நமக்குள் உள்ள இடைவெளி


எனக்கும் உனக்கும்
உள்ள இடைவெளி
குறைகிறது,

என் கனவுகளில் நீயும்
உன் நிணைவுகளில் நானும்
வசிக்கத்தொடங்கும் பொழுது

நீண்ட நேர காத்திருப்பின்
பிறகு சண்டையிடும் நேரம்
கூடும் பொழுது

உன் முத்தத்தின் சத்தம்
குறையும் பொழுது

நீ இல்லாத பொழுதுகள்
எனக்கு வலிக்கும் பொழுது

எனக்கும் உனக்கும்
உள்ள இடைவெளி
குறைகிறது

எனதுயிரை


கடைசி
வரை
போரடியும்
முடியவில்லை
என்னால்
உனதன்பைப் பெற!

நீயாவது
பெற்றுக்கொள்
எனதுயிரை!

வெற்றிக்கு வழி

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால்
சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம்

நான் கண்ட தேடல்

காதலும் மோதலும்
காவியத்தில் சிறந்தது

அன்பும் ஆசையும்
காதலிக்கும் போது பெரியது

கண்டிப்பும் பரிதவிப்பும்
காதலில் உயர்ந்தது

நியாபகமும் மறதியும்
காதலின் இறுதியில் உணர்வது

கோபமும் வெறுப்பும்
காதலித்த பின் வருவது

உறவும் உயிரும்
மணமான பின் புரிவது

பாசத்தை நேசித்தால் யோசிக்காமல் வருவது தான்
இதயமெனும் கூண்டில் உதயமாகும்

இன்பமான காதல்
இது தான்
நான் விரும்பும் காதலில்
நான் கண்ட தேடல்...

Thursday, September 15, 2011

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டவில்லை என்றாலும் தண்ணீர் இல்லாமல் தாமரை இல்லை நீயும் நானும் அருகில் இல்லை என்றாலும் உன் அன்பு இல்லாமல் நானும் இல்லை...
நம் எண்ணங்கள் எதுவே நமது செயலும் அதுவே...எதுவே நமது செயலும் அதுவே...

கணினி

இந்த உலகத்தயே
உங்கள் கண்முன்
கொண்டு வந்து
காட்டுகிறேன் என்று
மகள் கூற
...
தந்தை கேட்டார்

அதற்கு இப்போது
என்ன வேண்டும்
சொல் நீ

மகள் கேட்டால்
ஒரு மடி கணினி

பார்த்தவுடன் பழகாதே .....!
பழகியவுடன் இணையாதே.....!
இணைந்தவுடன் பிரியாதே.....!
பிரிந்தவுடன் வருந்தாதே .....!
வருந்தியவுடன் தேடாதே .....!
தேடி கிடைத்தால்.....!
மீண்டும் தொலைக்காதே....!



நீ யாரென்று
தெரியாமல் தொடங்கிய
கதையில்
நான் யாரென்றே தெரியாமல்
போய்விட்டது...

உன்னை நேசிபவர்களை வெறுக்க காரணம் தேடாதே
அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்க சந்தர்பம் தேடு..

பார்த்து பார்த்து பழகும் நிமிடங்களை விட
பார்காமலே இருக்கும் நிமிடங்களில் தான் ப்ரியம் அதிகரிக்கும்...

முட்களின் பாதுகாப்பில்
மலர் மலர்ந்தாலும்,,,,,,,,,,
வாசத்தை சூறையாடும்
காற்றை கைதுசெய்ய முடியாது....

நாட்கள் மாதங்களாகலாம்
மாதங்கள் வருடங்களாகலாம்
அதனால் என்ன
என் நட்பு
குறைந்துவிடவா போகிறது
நட்புகேது
காலமும்..... நேரமும்