காதலென்பது என்னவென்று
நாம் காதலித்தவரை
தெரியாது
ஒரு முறை கூட
சொல்லி கொண்டதில்லை
உன்னிடத்தில் நானும்
என்னிடத்தில் நீயும்
“உன்னை நான் காதலிக்கிறேன் என்று”
இன்று இதற்கென்றே சில
இலக்கணங்கள்
நம் இளைய தலைமுறை
தெரிந்து கொள்ளட்டும்
இவைகளில் ஓன்று கூட
நமக்குப் பொருந்தாது
தொலைவில்
இருந்தாலும்
தொலைந்து போனாலும்
தொல்லை தந்தாலும்
தொடர்ந்து வருமே
நம் காதல்
No comments:
Post a Comment