Friday, September 16, 2011

வார்த்தைகளின் வலி

மனங்களே
போதும்போதும்
வேண்டாம்வேண்டாம்


உங்கள் பூவிதழ்களில்
மலரும் சொற்களில்
முட்களை விதைத்து
நடமாடாதீர்கள் மண்ணில்


வார்த்தைகளை விட வலிமையான ஆயுதமும்
சந்தேகத்தை விட கொடுமையான தாக்குதலும்
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை இந்த உலகில்


தோட்டாக்களின் வலி தாங்கும் இதயம்கூட
வார்த்தைகளின் வலியை தாங்குவதில்லை

தோட்டாக்களின் ரணம் ஆறக்கூடும்
வார்த்தைகளின் ரணம்…………


ஆம்உண்மைதான்

வார்த்தைகளும் கண்ணாடிகளும் ஒன்றுதான்
தவறி விழுந்துவிட்ட பின்
என்ன செய்தாலும் ஓட்ட முடியாது இரண்டையும்


உங்கள் உதடுகளை தாண்டி
நெருப்பு பூசி வந்து விழுந்து விடுகிற
அந்த பிழையான வார்த்தைகள்

சமாதானங்களாலும் மன்னிப்புகளாலும்
ஒருபோதும் சரியாகி விடுவதில்லை


சந்தோஷ துக்கங்களைத் தாண்டி
என்றும் நம் வாழ்வில்

நிஜப்பிரியங்களை தவிர எதுவும்
முழுதாய் திருப்தியை தருவதில்லை


அதனால் பிரியமாய் இருங்கள் எல்லோர் மீதும்
எப்போதும் காயப்படுத்தாதீர்கள் உங்கள் பாசத்துக்குரியவர்களை


பிரியம் ஒன்றே உறுதி செய்யும்
நம் இதயம் எப்படிப்பட்டதென்று

No comments:

Post a Comment